பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக்காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.@லூக்கா 2:12

சிட்னி கிறாஸ், ஓல்டு கேரல்ஸ் நியூ கேரல்ஸ் சார்லஸ் லூ. ஹட்சின்ஸ் (பாஸ்டன், மாசச்சூசெட்ஸ், ஆலய பாடகர்க்குழு 1916), எண் 559 (🔊 pdf nwc). சௌ. ஜான் பாரதி (2018),

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

ஆம் கிறிஸ்மஸ் நாளின் காலை,
நம் ஆலயத்தின் மணி,
சிறாரின் ஆனந்தப்பாடல்,
ஆ இன்பமாய்த்தொனிக்குதே,

பல்லவி

டிங் டாங் தொனித்திடுதே,
டிங் டாங் நல் மணி
ஆலய மணி நீ நீ தொனி
ஆனந்த பாடல் தூதர் பாடிட,
பூமியில் சமாதானம்.

ஓர் தாயின் வார்த்தை கேட்டேன்
முதிர்ந்து மெலிந்தோய்ந்த,
ஓர் வேண்டுதலும் அங்கேதான்,
முழங்காலின் ஊன்றி நின்றே,

பல்லவி

ஆ ஓய்ந்ததே புயலும்,
நின்றோய்ந்த பனி சாரல்,
அம்மாமலையின் அருவி,
ஆழ் தூக்கமும் நல் கனாவும்,

பல்லவி

இந் நாளின் வேலை ஓய்ந்தே,
முடிவின் நேரம் இதோ,
நம் இயேசு ராஜா பிறந்தார்,
எல்லோரும் சேர்ந்தே பாடுவோம்.

பல்லவி