.நித்யப்பிதாவே உம்மையே,
நோக்கி யாம் வந்தோமே,
உம் கண்கள் காணும் எம் தேவை,
உம் கரம் ஈயுமே,
பயமும் பக்தியும் எம் நெஞ்சில்,
உம் அன்பு நடத்தவே,
வீண் மாயை யாவும் நீக்கியே,
எம் பயம் போக்குமே.
எம் ஆசையல்ல தேவையே,
உம் கிருபை தந்திடும்,
தயவாய் தெளிவாய் தாருமே,
தீமையன்றி நன்மை.ஆமேன்