ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்திலே அவரைப் பாடும் பாட்டு என் வாயிலிருக்கிறது; என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்பஞ்செய்கிறேன்.@சங்கீதம் 42:8
portrait
வில்லியம் கூப்பர்
1731–1800

வில்லியம் கூப்பர், 1779 (God of My Life, to Thee I Call). சௌ. ஜான் பாரதி (ஏப்ரல் 19, 2020),

இராகம் அரிசோனா, ராபர்ட் ஹென்றி எர்ன்ஷா, 1918 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

என் வாழ்வின் ஆண்டவர் நீர் தாமே,
வீழ்ந்தே உம் பாதமே அண்டினேன்,
வெள்ளம் போல் சூழ்ந்ததே சோதனை,
நடுங்கும் என்னை காத்திடும்.

நண்பர் இல்லார்க்கும் நண்பன் நீர்,
வேறெங்கே வேதனை கூறிடுவேன்,
உம் வாசல் திறந்தே தோன்றுதே,
திக்கற்றோர் ஏழைகள் வரவேற்க.

துக்கத்தில் உம்மிடம் புலம்பினோம்,
பக்கத்தில் வந்து நீர் பலம் தர,
உம் வாக்கு என்றென்றும் நிலையன்றோ?
வேண்டுவோர் வேண்டல் வீணாமோ?

நீர் தீர்க்கா துயரம் ஏதுமுண்டோ?
கேளாதொழிந்த ஜெபமுண்டோ?
ஜெபத்தைகேட்டு பதில் தந்து,
என் பாரம் யாவும் சுமந்தீரே.

எனக்கு நீர் மாத்ரம் போதுமே,
எனக்காய் வாதிடும் வல்லவர் நீர்,
உலகோடிசைந்தோர் அறியாரே,
என்னைப்போல் யார் உண்டவர்கட்கு.

மறந்தெரிந்த ஏழை நான்,
ஆனால் என் தேவன் நீர் மறவாமல்,
சேர்த்து காத்து வழி காட்டி,
வாக்கு தந்தீர் என் துணையானீர்.