சூர்ய ஒளிக்கதிர்ப்போல் நான்
பிரகாசிப்பேன் எங்கும்,
எவ்வழியிலும் ஆம் வீட்டில்,
நம் பள்ளியாயினும்,
பல்லவி
என் இயேசுவிற்காய் நான்
சூர்யன் போல் பிரகாசிப்பேன் நான்,
என் இயேசுவிற்காய் நான்
சூர்யன்போல் பிரகாசிப்பேன்.
நேசித்தே எல்லோரையும் நான்
அன்போடு வாழ்வேனே,
இன்பமாய் கனிவை ஊட்டி,
தம் அன்பு பிள்ளையாய்,
பல்லவி
இயேசுவின் ஒத்தாசையாலே,
எப்பாவம் சேராமல்,
அவரின் நன்மைகள் காட்டி,
என்றும் பிரகாசிப்பேன்,
பல்லவி
இயேசுவுக்காய் ஒளிவீச,
என்றும் முயற்சிப்பேன்,
என்றும் அவர்க்காய் எப்போதும்,
பின் வாழ்வேன் விண் வீட்டில்,
பல்லவி