என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கிறது.@சங்கீதம் 25:15
portrait
ஐசக் வாட்ஸ்
1674–1748

ஐசக் வாட்ஸ், 1719 (Mine Eyes and My Desire). சௌ. ஜான் பாரதி (ஜூன் 16, 2020),

இராகம் பிராங்கோனியா, யோஹான் பல்தாசர் கோனிக், 1738 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

என் பார்வை ஆர்வமும், என்றும் கர்த்தாவுக்கே,
நான் அவர் வாக்கை வேண்டவே, அவ்வார்த்தையில் ஓய.

உள்ளமே திரும்பு, இரட்சிப்பு அருகில்,
என் கால்களை விடுவித்தே, பயங்களினின்று.

மகா கிருபையாலே, மன்னிக்கும் தேவரீர்,
ஆபத்தின் பாதை செல்கின்றேன், நீர் மீட்டெடுப்பீரோ?

அலைபாயும் உள்ளம், ஆனால் எல்லாம் ஐயோ,
துக்கம் என் உள்ளம் பாய்ந்திட, தாழ்மையில் ஏங்குதே.

ஒவ்வோர் நாள் காலையும், மீண்டும் புது துக்கம்,
என் வலி வேதனைக்கண்டே, என் பாவம் மன்னியும்.

நரகின் சேனைகள், கோரமாய் வெறுத்தே,
என் வாழ்வுக்கெதிராய் நின்றே, கோபத்துடன் அதோ.

மரணத்தினின்றும், வெட்கத்தினின்றுமே,
நான் உம்மை நம்பி நிற்பது, மீட்பரே உம்மையே.

தாழ்மையாய் நின்று நான், உம் முகம் காணவே,
வீணாய் உம்மை யான் தேடினேன், என்றவர் கூறுவார்.

ஆமேன்.