குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள்; தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.@மத்தேயு 11:5
உருவப்படம்
ஜான் பாக்கஸ் டைக்ஸ்
1823–1876

ஜான் நீட்ஹாம், 1768 (No Rod of Ven­geance Je­sus Takes). சௌ. ஜான் பாரதி, ஏப்ரல் 24, 2020.

இராகம் தூய ஆக்னஸ், ஜான் பாக்கஸ் டைக்ஸ், 1866 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

பழிவாங்கும் குணமுள்ள,
மோசே அல்ல இயேசு,
சமாதானத்தின் தூதரே,
மீட்டே இரட்சிக்கவே.

மாந்தரின் வியாதி வேதனை,
தீர்க்கும் நல் வைத்யரே,
கேட்டவர் அவர்கள் வேண்டலை,
கனிவாய் காண்பாரே.

வல்லமையான வார்த்தையால்,
கண்கள் விழித்திதோ,
இமைகள் திறந்தே காணுமே,
இன்பமாய் ஒளிரவே.

வாதையால் கால் கரம் வீழ்ந்தவர்,
ஒன்றும் அசையாமல்,
ஊன்றுகோல் ஆசனம் தேடாமல்,
மான்போலே துள்ளுவார்.

வாய்பேசார் செவிடர் ஊனரும்,
சொல் கேட்டு பேசுவார்,
தன் ஓசை மீண்டும் கேட்டிட,
பாடியே துதிப்பாரே.

தீண்டொண்ணா குஷ்டரும் பார் இதோ,
மீட்பரின் கை தொட,
வாதை கொண்டோர் சப்பாணியும்,
மீண்டாரே வார்த்தையால.

சிற்றமாய் வீசும் புயல் காற்றும்,
வார்த்தைக்கேட்டமைதியாய்,
பேய்களும் பிசாசும் ஓடுமே,
மீண்டே வராமலே.

என் ஆன்மமே நீ சொல் சென்று,
மீட்பரின் வல்லமை,
கல்லரை சென்றோரும் கேட்டிதோ,
மீண்டார் மௌனம் விட்டு.

ஆண்டவர் மீட்பர் இயேசுவே,
பிரகாசம் உம் மேன்மையே,
உம் செயல் யாவும் பிரஸ்தாபிக்கும்,
உம் திவ்ய வல்லமை. ஆமேன்.