அழிவோரை காப்போம்,
மரிப்போரை மீட்போம்,
பாவத்தில் சிக்கியே பாதாளம் வீழ்ந்தார்,
கண்ணீரோடே அணைத்தே,
தூக்கியெடுத்தே, ஆண்டவர் இயேசுவின்
வல்லமையை சொல்வோம்.
பல்லவி
அழிவோரை காப்போம்
மரிப்போரை மீட்போம்,
இயேசு தயாபரர், மீட்க வல்லோர்.
கடின மனதுடன்
தூரச்சென்றிடினும்
பொறுமையாய் இருந்தவர்
சேர்த்தணைப்பாரே,காத்து நிற்கின்றார்,
அன்பாய் அழைத்தே,
மன்னித்தே மீட்பார் நம்பினோரை.
பல்லவி
சாத்தானின் பிடியால்
நொருங்குண்ட மனதில்
புதைந்த நற்செயல்களை
மீண்டும் ம(அ)ருள்வார்,
அன்புடன் கரம் நீட்டி தொட்டு
அருள் கனிவுடன்
அறுந்த நரம்பினை இசைக்கச்செய்வார்.
பல்லவி
அழிவோரை காப்போம்,
கடமையை உணர்வோம்,
வல்லமையின் தேவன் பெலனளிப்பாரே,
குறுகிய வழிதான் பொறுமையாய் ஜெயிக்க
கர்த்தர் உயிர் தந்தார் நமக்கென்று சொல்வோம்.
பல்லவி