கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா.@சங்கீதம் 127:1

சால்ட்டர் எண் 359–1912 (Un­less the Lord the House Shall Build). சௌ. ஜான் பாரதி (மே 11, 2020),

டியூக் ஸ்டிரீட், ஜான் ஹுட்டன், 1793 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

ஆண்டவர் வீட்டை கட்டாவிடில்,
வீண் பிரயாசமாம் நம் முயற்சி,
கர்த்தரின் பாதுகாப்பின்றி,
காவலும் வேரேதும் வீணன்றோ?

சூரியன் தோன்றும் முன் எழுந்தே,
இராவினிலும் தூங்காமல்,
அப்பத்திற்காம் பிரயாசத்தில்
கர்த்தர் அருள்வார் நல் ஓய்வு.

கர்த்தரால் வரும் ஈவாகும்,
பிள்ளைகள்தாம் இதுண்மையே,
தம் அம்புகள் ஆம் காத்திருக்க,
ஆனந்தமே இளம் மாந்தர்.

முதியோரின் வாழ்வு ஆனந்தம்,
பராக்கிரமமாய் வாலிபமும்,
எவ்வித பயமும் தேவையல்ல,
அன்புண்டு பாதுகாப்புமுண்டு.